• Mar 31 2025

குழந்தைகளை பிரிந்து சிங்கப்பூர் சென்ற நயன்.. வீடு திரும்பியதும் ஒரே பாசமழை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளை பிரிந்து கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு படப்பிடிப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் அவர் வீடு திரும்பியபோது குழந்தைகளுடன் அவர் கொண்ட பாசமழை குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட வின்னர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டார் என்பதும் அந்த குழந்தைகள் குறித்த புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில்  பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு படப்பிடிப்பிற்காக மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்று இருந்த நிலையில் தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். கடந்த  சில நாட்களாக குழந்தைகளை பார்க்காமல் ஏக்கத்தில் இருந்த நயன்தாரா குழந்தைகளை பார்த்ததும் இரண்டு குழந்தைகளையும் தனது மார்போடு அனைத்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு அனுபவம் மிகவும் சூப்பராக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளை பிரிந்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்றும் தற்போது குழந்தைகளை பார்த்த பின்தான் நிம்மதியாக இருக்கிறது என்றும் நயன்தாரா கூறியுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ’தி டெஸ்ட்’ உள்பட 3 படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து அவரது படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement