• Apr 28 2024

சினிமாவில் இந்த வேலை மட்டுமல்லாது... அந்த வேலையும் பார்த்த நயன்தாரா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி இருந்தார். மேலும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்தார். 


சினிமாவில் நுழைய வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்பட்டது போன்றே 'மனசிக்கரே' என்ற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் 'ஐயா' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு எனப் பல டாப் நடிகர்களுடனும் இணைந்து ஜோடியாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாது இடையில் சில காதல் சர்ச்சைகளையும் தோல்விகளையும் சந்தித்து வந்தார்.


எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி வேலையில் கவனம் செலுத்திய நயன்தாரா கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி முன்னணி நடிகையாக உயர்ந்தார். அந்தவகையில் ஒரு கட்டத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்தார் நயன்தாரா. அந்த படங்கள் எதிர்பார்த்ததை போலவே ஹிட்டடிக்க லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்தார்.


இந்நிலையில் நயன்தாரா குறித்து நாள்தோறும் ஏதாவது ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது நயன்தாரா, தமிழ் திரைப்படம் ஒன்றில் உதவி இயக்குநராக பணியாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி , ராணா டகுபதி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்த ஆரம்பம் படத்தில்தான் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாராம் நயன்தாரா.


அதாவது இப்படத்தின் படப்பிடிப்பின் போது புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் வர சற்றுத் தாமதமாகியுள்ளது. இதனால் கடுப்பான விஷ்ணு வர்தன், உதவி இயக்குநர்களை பிடித்து கத்தியுள்ளார். மேலும் நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் உதவி இயக்குநர்கள் யாரும் எனக்கு எந்த வேலையும் பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் உதவி இயக்குநர்கள் அனைவரும் ஓரமாக நின்றுள்ளனர்.

அந்த சமயத்தில் நயன்தாரா தான் கிளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தாராம். இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்தவர்கள் இருந்தவர்கள் அனைவரும் நயன்தாரா மேடம் இந்த வேலையை செய்கிறாரே என பேசிக் கொண்டார்களாம். இதனால் சத்தம் அதிகமாக சைலன்ஸ் என்று கூறிய நயன்தாரா ஷூட்டிங் நடக்கும் போது யாரும் சத்தம் போடாதீர்கள் என்றும் கூறி விட்டு சென்றாராம். 

Advertisement

Advertisement

Advertisement