• May 17 2024

நயன்தாரா அல்லது சமந்தா தான் வேணும் அவங்க தான் சரியா இருப்பாங்க- அடம்பிடிக்கும் பிரபல இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் இணைந்து காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் கமர்ஷியல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷாஜி கைலாஷ். தற்போது பிரித்விராஜ் நடிப்பில் கடுவா மற்றும் மோகன்லால் நடிப்பில் அலோன் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவை விரைவில் ரிலீஸாக காத்திருக்கின்றது.

இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் . எழுத்தாளர் இந்துகோபன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். குறிப்பாக இந்த படத்தின் கதை பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.

படத்திற்கும் பின்க் போலீஸ் என்றே டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் நடிப்பதற்கு நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் இந்த மூவரில் ஒருவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிட வேண்டுமென்று ஷாஜி கைலாஷ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement