• May 18 2024

குத்திக் காட்டிய நந்தினி... கோபத்தில் சண்டையிடும் குணசேகரன்.. அனைவரிடமும் கெஞ்சும் ஜனனி.. இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தினந்தோறும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் நந்தினி "இதென்ன நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உழைச்ச கம்பெனின்னு நினைசீங்களா" என குடித்து விட்டு வந்து நிற்கும் கதிரிடம் கேட்கின்றார். அதற்கு ஜனனி கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு கூறுகின்றார். 

மேலும் நந்தினியிடம் "நீ என்ன சமயம் பார்த்து குத்திக் காட்டுறியா" என குணசேகரன் கோபத்தில் கேட்டு சண்டையிடுகின்றார்.


அதுமட்டுமல்லாது குணசேகரன் "நான் கேட்டது எனக்கு கிடைக்கணும்ல அப்போ தானே இந்த நிச்சயதார்த்தம் நடக்கும், அப்புத்தா என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்காய்" என குணசேகரன் கூறுகின்றார்.

இவ்வாறாக இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement