விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது தற்போது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இந்த சீசனானது முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள்.
அத்தோடு ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். 75 நாட்களைக் கடந்து விட்டாலும் போட்டியாளர்கள் தற்போது வரை ஒருவருக்கொருவர் மாறி மாறி சண்டை போட்ட வண்ணம் தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கமல் "அசீம் மாதிரி ஒருவரை நீங்கள் சந்தித்து அவர் இந்தளவிற்கு கோபப்பட்டால் என்ன மாதிரி நீங்க ரீட் பண்ணுவீங்க" எனப் போட்டியாளர்களை கேள்வி கேட்கின்றார். அதற்கு தனலட்சுமி "நான் பேசாமல் வந்திடுவேன்" எனக் கூறுகின்றார்.
அதேபோல் ஷிவின் "கண்டிப்பாக நான் அவர் பக்கத்தில் கூடி போய் இருக்க மாட்டேன்" எனக் கூறுகின்றார். மைனா "போடா எண்டிட்டு போய்டுவேன்" எனக் கூறுகின்றார். மேலும் மணிகண்டன் "கண்டிப்பாக நான் தப்பைக் கேட்பேன்" என்கின்றார். அதற்கு உடனே கமல் "நீங்க வீட்டுக்குள்ளேயே நீங்க கேட்கல, பிறகு எங்க வெளிய கேட்கப் போறீங்க" எனக் கிண்டலாக கூறுகின்றார்.
Listen News!