• May 17 2024

சிசேரியன் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்த மூர்த்தி- தனத்தின் அண்ணா எடுத்த முவு- அதிர்ச்சியில் உறைந்த மீனா

stella / 9 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தனத்தை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனதும் வோட்டில் அட்மிட் பண்ணுவதற்காக மூர்த்தியும் கதிரும் ஓடித் திரிகின்றனர்.பின்னர் ஒரு வழியாக அட்மிட் பண்ணிய பிறகு தனத்துடன் மூர்த்தி தானும் நிற்க போகின்றேன் என்று சொல்ல முல்லை டாக்டர் பார்த்துக்குவாங்க நீங்க வெளில போங்க மாமா என்று சொல்லி அனுப்பி வைக்கின்றார்.


பின்னர் ஹாஸ்பிட்டலுக்கு ஓடி வரும் மீனா வெளியில் எல்லோரும் நிற்பதைக் கவனிக்காது நேராகச் சென்று தனத்தை பார்த்து விட்டு வெளியில் வருகின்றார். வெளியே வந்து எல்லோருடனும் பேசிட்டு இருக்கும் போது டாக்டர் இதில சைன் போட்டுத் தாங்க சிசேரியன் பண்ணனும் என்று சொல்ல கதிர்,ஜுவா, மூர்த்தி எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

எதற்காக சிசேரியன் பண்ணனும் சைன் எல்லாம் போட்டுத் தரமுடியாது என்று சொல்ல டாக்டரும் கோபித்துக் கொண்டு செல்கின்றார். தொடர்ந்து வீட்டில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பிள்ளைகளை வைததுக் கொண்டிருக்கும் போது கஸ்துாரி ஏன்டி உங்க வீட்டில யாருமே சொன்ன டைம்ல பிள்ளை பெத்துக்க மாட்டீங்களா என்று கேட்டு நக்கலடிக்கின்றார்.

பின்னர் அவர் போன் பண்ணி தனத்தின் அண்ணாவிடம் உங்க தங்கச்சி தனத்திற்கு வலி வந்ததால் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய்ட்டாங்க என்று சொல்லி விடுகின்றார். அதன் பின்னர் முல்லையும் மீனாவும் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். சைன் தானே டாக்டர் மாமா மாதிரி நாங்க போட்டுத் தாறோம் அவர் மாதிரி நாங்க சைன் போடுவோம் என்று சொல்ல டாக்டர் நீங்க எதுக்காக சிசேரியன் பண்ணுறோம் என்று சொல்லாதது தான் பிரச்சினை, அதைப் போய் அவங்க கிட்ட சொல்லுங்க என்று சொல்லி வெளியே அனுப்பி விடுகின்றார்.


தொடர்ந்து மூர்த்தி டாக்டரிடம் எதுக்காக சிசேரியன் பண்ணனும் என்று கேட்க டாக்டர் உண்மையை சொல்ல வர மீனா இடையில் கதை கொடுத்து டாக்டரை சொல்ல விடாமல் செய்கின்றார். அந்த நேரம் தனத்தின் அம்மாவும் அண்ணாவும் வந்து சிசேரியன் பண்ண வேண்டாம் இது பொய் வலியாக கூட இருக்கலாம் வீட்டுக்கு அனுப்பிடுங்க, நாங்க வேற ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்ல மீனா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement