• May 01 2024

ரவீனாவைக் காதலிப்பதை வெளிப்படையாகச் சொன்ன மணி- குழப்பத்தில் இருக்கும் ஐஸ்வர்யா- பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சுவாரஸியம்

stella / 6 months ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல பிரச்சினைகளை உருவாக்கி கொண்டு, ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டு வருகின்றனர்.

 குறிப்பாக நேற்றைய தினம், கடந்த ஆறு சீசனில் நடந்திடாத சம்பவம், பிக் பாஸ் சீசன் 7ல் அரங்கேறியது.அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டது 7 போட்டியாளர்கள் என்றும், பவா செல்லதுரை வெளியேறிவிட்டதால் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளனர். 


எனவே எங்களால் வேலைகள் செய்ய முடியாது, என ஸ்ட்ரைக் செய்தனர். இதனால்  பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் மதியம் முழுவதும் சாப்பிடாமல் பசி பட்டினியால் வாடியதை பார்க்க முடிந்தது.பிக் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அனுமதிக்காமல் கேஸ் ஆன் பண்ண முடியாது என்பதால், ஸ்மால் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் பழம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு தங்களின் பசியை போக்கிக் கொண்டனர்.

 அதேபோல் பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்களும், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டனர். ஆனால் ஸ்மால் பாக்ஸ் வீட்டை சேர்ந்தவர்கள் தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் சிக்கல் ஏற்பட்டது. பிக் பாஸ்வும் இவர்களுடைய பிரச்சனைக்கு செவி சாய்க்காத நிலையில், அதிரடியாக களத்தில் இறங்கிய பிக் பாஸ் வீட்டில் கேப்டன் சரவணன் விக்ரம், இனி நானே வீட்டில் உள்ள வேலைகளை செய்வதாக ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவே மீண்டும் சமையல் செய்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தனர்.


இதனை அடுத்து ஐஸ்வர்யாவும்  மணியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மணி ரவீனாவைக் காதலிப்பதாக கூறியிருந்தார். ஆனால் ரவீனா இதனை தன்னிடம் சொல்லாமல் எதற்காக அவ கிட்ட சொன்னாய், உங்க வீடு வேற, எங்க வீட்டில இதை ஈசியா எடுத்துக் கொள்ளமாட்டாங்க, இந்த விஷயத்தை முதலில் நீ என் கிட்ட தானே சொல்லியிருக்கணும் என்று சொல்கின்றார். இதனால் மணி கோவப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement