நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியாகிய கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகியது. இருப்பினும் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த 30ம் திகதி வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது.
அத்தோடு இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைக்கின்றார்.இந்த படம் கர்நாடக மாநிலம் கேஜிஎப் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கு குறித்து பேசும் கதைக்களம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்காத நிலையில் படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.
Listen News!