விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் மைனா நந்தினி. இவர் 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸில் அவர் கடந்து வந்த பாதை பற்றி கூறி இருக்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்கள் பஸ்ஸர் அழுத்தியதால் அவர் முழுமையாக பேசாமல் வெளியில் வந்துவிடுகிறார்.
அதன் பின் மற்ற சில போட்டியாளர்களிடம் பேசிய மைனா நந்தினி தான் ஆரம்பகாலத்தில் சந்தித்த விஷயங்கள் பற்றி சொன்னார்.சென்னையில் லோக்கல் ரயில் 11 மணிக்கு மேல் வராது என எனக்கு தெரியாது.மேலும் ஒருமுறை அப்படி ரயில் நிலையத்தில் இரவில் தூங்கிவிட்டேன்.
"வாய்ப்புக்காக பல டிவி சேனல்களை அணுகினேன். ஆனால் வாட்ச்மேனை தாண்டி செல்லவே முடியாது. கேட்டிலேயே நிற்கவைத்துவிடுவார்கள். அதன் ஒரு அடல்ட் ஷோ தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ஷோ அது."
"அந்த ஷோவில் இருந்தால் என் மொத்த இமேஜும் மாறிவிடுமுன நண்பர்கள் சொன்ன அட்வைசுக்கு பிறகு ஒரு மாதத்தில் அதில் இருந்து வெளியில் வந்தேன்."
"அதன் பின் அதிகம் மெனக்கெட்டு நண்பர்கள் மூலமாக விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அத்தோடு 100 ரூபாய்க்கு 4 ட்ரெஸ் எடுத்து தைத்துக்கொண்டேன். அதை வைத்தே சீரியலை நடித்து முடித்தேன். ரச்சிதாவின் பழைய ட்ரெஸ் எல்லாம் எனக்கு கொடுத்துவிடுவார்."
"அந்த சீரியலில் எனக்கு 1500 ரூ சம்பளம் ஒரு நாளுக்கு தருவார்கள். அத்தோடு மாதம் 5 நாள் ஷூட்டிங் இருக்கும். அதை வைத்து 7500 கிடைக்கும்.
அப்போது ஒரு அஸ்பேஸ்ட்டாஸ் சீட் வீட்டில் வாடகைக்கு சென்றேன். அப்பா ஹைதராபாத்தில் இருந்து இங்கே வந்துட்டார்.அத்தோடு இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் சந்திப்போம்.மேலும் இப்படி ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த பிரச்சனைகள் பற்றி மைனா நந்தினி கூறி இருக்கிறார்.
நான் இப்போ வெளியே போனால் கூட.. 'நீங்க எங்கயோ மிஸ் ஆகிட்டீங்க மைனா' என பலரும் சொல்வார்கள். இப்போது ஏன் பிக் பாஸ் வந்தேன் என்றால் இது தான் காரணம் என மைனா நந்தினி சொல்லி உள்ளார்.
Listen News!