• May 01 2024

திருமணமான ஒரு மாதத்திலேயே வேலையை ஆரம்பித்த மகாலக்ஷ்மி...கதறும் ரவீந்தர்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மஹாலக்சுமியும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது.இவ்வாறு நாட்கள் பல கடந்தாலும் சோசியல் மீடியாவை பார்த்தாலே இவர்களின் பேச்சாகவே காணப்படுகின்றது.

அதாவது வெள்ளித்திரை நடிகை நயன்-விக்கி திருமணத்தை விட இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது பெரிய ட்ரெண்டாகி விட்டது.இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் திருமணம் நடந்து விட்டது என புகைப்படத்தை இட்டு ரசிகர்களுக்கு சொன்ன சேதியை ரசிகர்கள் ஏற்க மறுத்தார்கள்.இவர்கள் இருவருக்கும் உண்மையாகவே திருமணம் நடந்து விட்டது என இவர்கள் கொடுத்த பேட்டியின் மூலமே தெரிந்து கொண்டார்கள்.

இவர்களின் திருமணத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாது அடிக்கடி ரொமான்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட வண்ணம் இருந்தார்கள்.

இவ்வாறுஇருக்கையில்  ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த ஜோடி தற்போது விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளனர்.

அத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை வந்தாள் மஹாலக்ஷ்மியே என்ற அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரமோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனிடையே சீரியல் நடிகையான மஹாலக்ஷ்மி, இனி சீரியல்களை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது ஸ்னாக்ஸ் ஐட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ளார். குக்கீஸ்களை விளம்படுத்தியுள்ள மஹா, ஒவ்வொன்றும் ஒரு டேஸ்ட் என அவற்றின் ஸ்பெஷாலிட்டியையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மகாலக்ஷ்மி, ஸ்னாக்ஸ் விளம்பரத்தில் இறங்கியுள்ளார். எனினும் இதனை பார்த்த நெட்டிசன்கள் திருமணமான ஒரு மாதத்திலேயே வேலையையும் ஆரம்பித்து விட்டீர்களா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஸ்வீட் கையில் ஸ்வீட்டா என்று கேட்டு மஹாலக்ஷ்மியை திக்குமுக்காட வைத்துள்ளனர்.

மேலும்  இந்த பதிவைப் பார்த்து ரவீந்தர் குக் பண்ணுடி சொன்னா குக்கீஸ் சாப்பிடுறா...நீ செய் என பதிவிட்டுள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement