• May 01 2024

பெண்களை வைத்து விபச்சாரம்.. மாதவன் பட நடிகை அதிரடியாக கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை ஆர்த்தி மிட்டல். இவர் மாடல் நடிகை என்பதை தாண்டி, காஸ்டிங் இயக்குநராக இருப்பதால் அனைத்து பாலிவுட் பிரபலங்களுக்கும் மிகவும் பரிச்சியமானவர். 


அந்தவகையில் இவர் தற்போது நடிகர் மாதவனுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விபச்சார வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம் ஆன நிலையில், போலீசார் இவரை கைது செய்துள்ளனர். 

அத்தோடு இவர் விபச்சாரத்தில் தள்ளிய இரண்டு பெண்களையும் போலீசார் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்துப் போலீசார் தெரிவிக்கையில் "நடிகை ஆர்த்தி தன்னுடன் மாடலாக பணிபுரிபவர்களை குறிவைத்து, பட வாய்ப்பு பெற்று தருவதாகவும், பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இவ்வாறு ஓஷிவாராவில் உள்ள ஆராதனா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆர்த்தி, இவர் தன்னுடைய வீடு மற்றும் சில இடங்களில் விபச்சார கும்பலுடன் இணைந்து பல இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக" போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் சுதாருக்கு தகவல் கிடைத்தது. 


இதனையடுத்து ஆர்த்தி மிட்டலை வளைத்து பிடிக்க அங்கு சென்ற போலீசார் வாடிக்கையாளர் போல் காட்டிக்கொண்டு ஆர்த்தியை அழைத்து இரண்டு பெண்கள் விபச்சாரத்திற்கு வேண்டும் என கேட்டனர். அதற்கு ஆர்த்தி அவர்களிடம் 60,000 ரூபாய் கேட்டு மொபைலில் இரு பெண்களின் புகைப்படங்களை சுதர் என்பவருக்கு அனுப்பி இருக்கின்றார்.

பின்னர் மாடல்கள் ஜூஹு அல்லது கோரேகானில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குவர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கோரேகானில் உள்ள ஹோட்டலில் இரண்டு அறைகளை பதிவு செய்த சுதர், குற்றப்பிரிவில் இருந்து இரண்டு போலி வாடிக்கையாளர்களை ஹோட்டலுக்கு அனுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


பின்னர் நடிகை ஆர்த்தி மிட்டலும் பணத்தை பெற்று கொண்டு, இரண்டு இளம் பெண்களுடன் ஹோட்டலுக்கு வருவதும், ரகசியக் காவலர்களிடம் கருத்தடை சாதனங்களை ஒப்படைப்பதும் மறைவான கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மும்பை காவல் துறையினர் நடிகை ஆர்த்தி மிட்டலை கையும் களவுமாக கைது செய்தனர். 

இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 மற்றும் மனித கடத்தலுக்கான பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்த விசாரணையில், ஆர்த்தி தங்களுக்கு தலா ரூ.15,000 தருவதாக உறுதியளித்ததாக, விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்ட இரு இளம் மாடல்களும் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர். 

ஒரு நடிகையே பெண்களை விபச்சாரத்திற்காக பயன்படுத்திய விடயமானது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement