• May 09 2024

ஒளிந்திருக்கும் மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்..அதிரடி காட்டும் போலீஸ்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 தலைமறைவாக உள்ள மீராமிதுனுக்கு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க உள்ளதாக தகவல்  தற்போது வெளியாகியுள்ளத

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மீது, விஜய் டிவி, பிக்பாஸ், கமல் ஹாசன் என ஒருவரையும் விட்டுவைக்காமல் அவர்கள் பற்றி தாறுமாறாக பேசியிருந்தார். அதுமட்டும் இல்லாமல், தமிழ் சினிமா தன்னை புறக்கணிப்பதாகவும், பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து என்னைப்போலவே மாற ஆசைப்படுவதாக கூறி இணையத்தில் அவ்வப்போது வந்து கடுப்பேத்தி வந்தார். குறைந்த ஆடையில் புகைப்படங்களும் மற்றும்  வீடியோக்களையும் ஷேர் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.



இவ்வாறுஇருக்கையில் கடந்த ஆண்டு நடிகை மீரா மிதுன் பட்டியலின இன மக்கள் குறித்து தகாத முறையில் தரக்குறைவாக பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. எனினும் இதையடுத்து, மீரா மிதுன் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்னது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறும் மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.



போலீசார் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் ஆண் நண்பருடன், கேரளாவில் இருந்த போது அவரை தமிழக போலீசார் கொத்தாக தூக்கினர். எனினும் இதையடுத்து, போலீசார் என்னை கொடுமைப்படுத்துனாங்க, சாப்பாடு வாங்கி தரல, தண்ணீ தரல என அடுக்கடுக்கான புகார்களை சொன்னார்.போலீசாரிடம் இவரின் பருப்பு வேகாததால், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன், சில மாதங்கள் கழித்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீராமிதுன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் மீராமிதுன் போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார்.எனினும்  இதையடுத்து,மீரா மிதுனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த லுக் அவுட் நோட்டீஸ் நாளை கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement