• Apr 27 2024

கோவை குணா திடீர் மரணம்.. அன்றைய தினம் நடந்தது என்ன..? உண்மைக் காரணத்தை வெளியிட்ட மனைவி.. வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'அசத்தப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கோவை குணா நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார். இவரின் இறப்பிற்கு மதுப் பழக்கம் தான் காரணம் என ஒரு சிலரும், சிறுநீரகப் பிரச்சினை தான் காரணம் என வேறு சிலரும் கூறியுள்ளனர்.


இந்நிலையில் தற்போது கோவை குணாவின் இறப்பு குறித்து அவரது மனைவி ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது "அவருக்கு சில நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்காக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அந்த மருந்துகளை ஒழுங்காக சாப்பிட்டு வந்தும் அவருக்கு குணமாகவில்லை" என்றார்.


அதுமட்டுமல்லாது "அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பியிருந்தார்கள். அதனுடைய பரிசோதனை முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்குக்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு சாப்பிட்டு, இறுதியாக ஒரு நாள் அவரால் முடியவில்லை. அப்போதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று. உடனே நான் பக்கத்தில் இருந்தவர்களிடம் சர்ச்சுக்கு போன் செய்து வந்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் வந்து ஜெபம் செய்தார்கள்.


ஆனாலும் அவருக்கு சரியாகவில்லை. சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடம் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால், அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டு கொண்டிருந்தேன். 

அதன் பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்துக்கொண்டார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார். உடனே மருத்துவர்கள் அழைத்து பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது கர்த்தருடைய கிருபையின் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான்’" என்று கண் கலங்கியபடி கூறியுள்ளார் குணாவின் மனைவி.

Advertisement

Advertisement

Advertisement