• May 18 2024

அப்பத்தாவின் கதையை முடிக்கத் திட்டம் போட்ட கதிர்- ஜனனியின் அப்பாவைத் திட்டி ஈஸ்வரி- Ethirneechal - Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனியின் அப்பாவிடம் ஈஸ்வரி உங்களுக்காகத் தான் இந்த கல்யாணத்தைப் பண்ணிட்டு ஜனனி படக்கூடாத கஸ்டம் எல்லாம் பட்டிட்டு இருக்கிறாள், அவளைப் போய் தப்பா சொல்லீட்டீங்களே இது என்ன நியாயம் என்று கேட்கின்றார்.


தொடர்ந்து கதிர் ஞானம் கரிகாலன் எல்லோரும் வண்டியில் போய்ட்டு இருக்கும் போது, கதிர் அவர் சொன்னதை எந்த பிசிரும் இல்லாமல் முடிச்சுக் காட்டுறேன் என்று சொல்லும் போது, கரிகாலன் என்ன அப்பத்தாவை கொல்வது தானே என்று கேட்க கதிர் அதிர்ச்சியடைகின்றார்.

மறுபுறம் ஜனனி, எந்த சக்தியை வைத்து நான் ஜெயிக்க முடியாது என்று சொன்னீங்களோ, இந்த சக்தியை வைத்து தான் நான் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டுவேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement