• Apr 27 2024

சிவாவை கார்த்திக்கிடம் மாட்டி விட்ட அனு- சுந்தரியின் நடவடிக்கைகளில் சந்தேகப்படும் கார்த்திக்

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் அனுவின் நண்பனான சிவா எப்படியாவது கார்த்திக்கின் உண்மை முகத்தை அனுவுக்கு தெரியப்படுத்த புதிய திட்டம் போட்டு வருகின்றார. மேலும் சிவா அனுவுக்க குழந்தை பிறப்பதில் உள்ள சிக்கலை சுந்திரியிடமும் அனுவின் அம்மாவிடமும் சொல்லும் போது அனு கேட்டு விட்டார் இதனால் சொத்தை கார்த்திக்கிற்கு எழுதி வைக்கும் படி சண்டை போடுகின்றார்.

மேலும் கார்த்திக்கிடம் தனக்கு குழந்தை பிறப்பதில் இருக்கும் சிக்கலை கூற கார்த்திக் இந்த விஷயத்தை முதலில் என்கிட்ட சொல்லி இருக்கனும் என்று சண்டை பிடிக்கின்றார். அதன் பின்னர் சுந்தரி தனியாக கோயிலுக்கு போவதை கார்த்திக் பார்த்து விட்டு எதற்காக சுந்தரி தனியாக கோயிலுக்குச் செல்கின்றார் என்று யோசிக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement