• May 19 2024

லஞ்சம் வாங்கியதாக கதிரிடம் உண்மை எல்லாம் சொன்ன கண்ணன்- நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறி அழும் மூர்த்தி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஐஸ்வர்யா வீட்டில் இருந்த டிவியை எடுத்துக் கொண்டு வந்து கதிர் கொடுக்க ஐஸ்வர்யா சந்தோசப்படுகின்றார். பின்னர் அப்பிடியே கேபிள் கனெக்ஷனும் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று சொல்ல கதிர் நான் சொல்லிட்டு தான் வந்திருக்கிறேன்.அவங்க இன்னும் கொஞ்ச நேரத்தில வந்து பூட்டிடுவாங்க என்று கதிர் சொல்லுகின்றார்.


பின்னர் மூர்த்தியும் வந்து விட ஐஸ்வர்யா எல்லோருக்கும் பாப்பானும் ஜுசும் தன்னுடைய கையால் செய்து கொண்டு வந்து கொடுத்து இதை சாப்பிட்டுக் கொண்டே எல்லோரும் டிவி பாருங்க என்று சொல்ல மூர்த்தியும் டிவியைப் போடுகின்றார். அதில் கண்ணன் கைது செய்யப்பட்ட விஷத்தையும் லஞ்சம் வாங்கிய விஷயத்தையும் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியடைகின்றது.

மூர்த்தி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அழுகின்றார். ஐஸ்வர்யாவும் தலையில் அடித்து அழுது கொண்டிருக்க தனம் சமாதானப்படுத்துகின்றார். அப்போது முல்லையும் கண்ணன் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றார். பின்னர் கதிர் பாஃங்கிற்கு சென்று விசாரித்து வருவதாகச் செல்கின்றார்.பாஃங்கில் சென்று கண்ணன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று கெஞ்சுகின்றார். 


 பினன்னர் கண்ணனைப் பார்த்து முதலில் கண்ணன் தான் லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்கின்றார். பின்னர் கண்ணன் கதிரின் காலில் விழுந்து என்னை மன்னிச்சிரு அண்ணா நான் லஞ்சம் வாங்கினேன் தான் ஆனால் இப்போ வாங்கவில்லை என்று சொல்கின்றார்.இதைக் கேட்டு கதிர் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement