ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.அதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் இயக்கி இருந்தது.
மேலும் இந்தப் படத்தை ஆங்கிலம், போர்த்துகீசிய, துருக்கிய, ஸ்பானிய, கொரிய மொழிகளின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பின்னர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
இன்று அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.அத்தோடு ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஜப்பானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
நடிகர் ராம் சரண், தனது மனைவி உபசன்னாவுடன் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய இண்டர்நேஷனல் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களை சந்தித்தனர். அத்தோடு அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ராம் சரண் & உபசேனாவை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அத்தோடு டோக்கியோ நகரின் சாலையில் கையில் ரோஜா பூக்களை ஏந்தி ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி, ராம் சரண், அவரது மனைவி உபசன்னா ஆகியோர் ஊர் சுற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.
Listen News!