• Apr 27 2024

மாமனாரின் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா- ஐஸ்வர்யாவைத் திட்டித் தீர்த்த முல்லை- கடும் கோபத்தில் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதைப் பார்ப்போம்.

வீட்டிலிருநது தனமும் முல்லையும் மீனாவும் ஐஸ்வர்யாவும் இல்லாதது கவலையாக இருக்கு என்று என்று பேசிக் கொண்டிருக்க ஐஸ்வர்யா செய்த வேலையை நினைத்து முல்லை திட்டுகின்றார். அம்மாவின் சொந்தக்காரங்க எல்லோருமே இப்படித் தான் என திட்டுகின்றார்.பின்னர் கயல் நினைவாகவே இருக்கு என்று சொல்ல முல்லை மீனாவுக்கு போன் செய்கின்றார். மீனவின் அம்மா போனை கட் செய் ஓஃப் பண்ணி விடுகின்றார்.


தொடர்ந்து ஜீவா கயல் பாப்பாவுடன் வெளியில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்டமர் ஒருவர் போன் செய்து பொருட்கள் தேவை என சொல்ல ஜீவா நீங்க அண்னுக்கு போன் செய்து கேளுங்க என்று கூறி விட்டு உள்ளே செல்கின்றார். இதனை எல்லாம் ஒழிந்து கொண்டு நின்று பார்த்த மீனாவின் அப்பா அந்த நம்பருக்கு போன் செய்கின்றார்.

அத்தோடு அந்த கஸ்டமரிடம் இனிமேல் போன் செய்யக் கூடாது பாண்டியஸ்டோர்ஸிற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என ஜீவா சொல்வதைப் போல சொல்லி விட்டு வைத்து விடுகின்றார். தொடர்ந்து காலையில் கதிர் தன்னுடைய ஹொட்டலுக்காக  கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் அந்த கஸ்டமர் ஜீவா இந்த கடைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சொன்னதாக சொல்ல மூர்த்தியும் கதிரும் அதிர்ச்சியடைகின்றனர்.


தொடர்ந்து வீட்டில் மீனாவும் ஜீவாவும் பேசிட்டு இருக்கும் போது அங்கு வரும் மீனாவின் அப்பாவும் அம்மாவும் கயலை பிளே ஸ்கூலில் சேர்த்தாச்சு என்னும் விடயத்தை சொல்கின்றனர். அத்தோடு ஜீவாவையும் மீனாவையும் கொண்டு போய் விட்டிட்டு வரும் படியும் சொல்ல இருவரும் கயலைக் கூட்டிக் கொண்டு செல்ல கிளம்பிய போது ஜீவா கயலை சேர்க்க முதல் சொல்லல,சேர்த்தாப்பிறகு சொல்லுறாங்களே என மீனாவைக் கேட்கிறார் மீனா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement