• May 18 2024

கரிகாலன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கதறி அழுத ஜான்சிராணி- ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் கொடுத்த ஷாக்

stella / 9 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதாவது ஈஸ்வரி போன் செய்து ஜீவானந்தத்திடம் நான் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி கதைக்கிறேன் என்று சொல்கின்றார்.அதற்கு ஜுவானந்தம் நீங்க குணசேகரின் மனைவி என்பதால் பேசல,ஈஸ்வரி என்பதால் தான் உங்க கூட கதைக்கிறேன் என்று சொல்கின்றார்.இதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியடைகின்றார்.


 தொடர்ந்து ஆதிரை நீ வேணாம் போ என்று சொல்லி கரிகாலனைத் துரத்துகின்றார். அப்போது கரிகாலன் என்னை எல்லோரும் கிறுக்குப் பயலாத் தான் பார்க்கிறாங்க, ஆனால் இந்த கிறுக்குப் பயலுக்குள்ளும் ஒரு மனது இருக்கு ஆதிரை என்று சொல்லி அழுகின்றார்.

இதைக் கேட்ட ஜான்சி ராணியும் கதறி அழுகின்றார்.ஆதிரையும் அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement