• May 19 2024

சிகப்பு சேலையில் தேவதை போல் நடந்து வந்த ஜனனி... காதில ஜிமிக்கி கம்மல் வேற... அழகில சும்மா ஜொலிக்கிறாங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை ஜனனி ஐயர். இவர் சமீபத்தில் தனது பெயரிலிருந்து ஐயரை தூக்கி விட்டு இனிமேல் ஐயர் இல்லை ஜனனி மட்டும் தான் எனக் கூறியிருந்தமை நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்னரே விளம்பரங்களில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கின்றார்.

மேலும் இவர் 2009 இல் வெளியாகிய 'திரு திரு துரு துரு' என்ற படத்திலும், 2010 இல் வெளியாகிய 'விண்ணைத் தாண்டி வருவாயா" என்ற படத்திலும் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 இல் வெளியான 'அவன் இவன்' என்ற திரைப்படத்தில் நடித்து பலராலும் அறியப்பட்டார்.

அதுமட்டுமல்லாது விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு 4-ஆம் இடத்தை பெற்றிருந்தார். இவ்வாறாக பல வழிகளிலும் பிஸியாக இருந்து வருகின்ற ஜனனி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம்.  அதிலும் இன்ஸ்டாகிராம் மீது இவருக்கு அலாதி பிரியம் உண்டு.

அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களினை இவர் பதிவு செய்து வருவது வழமை. இந்நிலையில் தற்போது சிகப்பு நிற சேலை மற்றும் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து தேவதை போல் நடந்து வந்த வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது க்யூட்டான போஸ்களும் கொடுத்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? தமது லைக்ஸ்களை அள்ளி வழங்கி ஜனனியை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement