• Oct 08 2024

பேஷண்ட்ட கல்யாணம் பண்ண போற மாதிரி இருக்கு..! பவானி வழங்கிய பகீர் பேட்டி!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5இல் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. 

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகத் தொடங்கி விட்டனர். இருப்பினும் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. 

எனினும், அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் அந்நிகழ்ச்சி முழுவதும் சுற்றினார். இந்த சீசனில் பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.


இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவனி மற்றும் அமீருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்த காரணத்தால் இவர்கள் இருவரும் பின்பு பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் வென்றனர்.

அத்தோடு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பல முறை தனது காதலை சொன்ன போதும் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஒரு கட்டத்தில், ஐ லவ் யூ சொல்லி அமீரின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். 


தற்போது சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாது சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில், அமீர் பற்றி பவானி வழங்கிய பேட்டி ஒன்று தற்போது  வைரலாகியுள்ளது.

அதில் அவர் கூறும் போது, அமீர் எனக்கு காலையில் குட்டிமா.. பேபிமா... ஐ லவ் யூ.. சாப்பிட்டியா.. இந்த மாதிரி தான் காலையில மெசேஜ் வரும் அவ்வளவுதான்... 

அதுக்கப்புறம் நைட் தான் மெசேஜ் வரும் ஐ லவ் யூ மா...குட் நைட்.. என்று, ஏதோ பெரிய பேஷண்ட்ட கல்யாணம் பண்ண போற மாதிரி இருக்கு... என்று காமெடியாக கூறியுள்ளார்.

Advertisement