• May 01 2024

காலில் விழுந்த ஈஸ்வரிப் பாட்டி...அழுது கொண்டே எழில் எடுத்த முடிவு..பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, லட்சுமணன், நேகா மேனன்,ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அத்தோடு இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.

இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும். பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சில மாதங்களாகவே சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான். தற்போது சீரியல் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.

அத்தோடு முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் கோபி. தற்போது கதைப்படி பாக்கியாவின் இளைய மகன் அமிர்தா என்கிற விதவை பெண்ணை காதலித்து வருகிறார். ஆனால் அதற்கு பாட்டி தடையாக நின்று பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று குறியாக இருக்கிறார். 



இவ்வாறுஇருக்கையில் தற்போது ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் பாட்டி ஈஸ்வரி எப்படியாவது எழிலுக்கு பணக்கார பெண்ணான வர்ஷினியை திருமணம் செய்து வைக்க பிளான் போட்டு எழிலின் காலில் விழுந்து அழுகின்றார்.மனம் பொறுக்காத எழில் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு அமிர்தாவை சந்தித்து உண்மைகளை கூறி அழுது மன்னிப்பு கேட்கின்றார்.


அமிர்தாவும் அதைக் கேட்டு அழுகின்றார்.இவ்வாறுஇருக்கையில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து நிற்கிறார்கள்.



இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement