• Apr 27 2024

எங்கேயும் எப்போதும் திரைப்பட நடிகரின் திருமணம் நிறுத்தப்படவில்லையா?- ரசிகர்களுக்கு வெளியாகிய சூப்பர் குட் நியூஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தான் சர்வானந்த். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார். தமிழில் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான்  எங்கேயும் எப்போதும் . இப்படத்தில் இவருடைய காரெக்டர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.

இப்படத்திற்கு பிறகு சில படங்களில் சின்ன வின்ன வேடத்தில் நடித்தாலும் சரியான வெற்றி கிடைக்கவில்லை.ஆனால் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார்.  கடைசியாக இவரது நடிப்பில் கனம் என்ற படம் வெளியானது,


 தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் வெளியாகி இருந்தது.கடந்த ஜனவரி 26ம் தேதி இவருக்கும் ரக்ஷிதா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின் இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது, எனவே ரசிகர்கள் திருமணம் நின்றுவிட்டதா என பேச ஆரம்பித்தார்கள்.


இந்த நிலையில் தான் இவர்களது திருமணம் வரும் ஜுன் 2 மற்றும் 3ம் தேதி ஜெய்பூரில் Leela Palaceல் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement