• May 18 2024

பிக்பாஸ் வீட்டுக்குள் இதெல்லாம் நடக்கின்றதா?- இதுவரை வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது பைனலை நெருங்கி வருகிறது. தற்போது 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்றதன் காரணமாக அமுதவாணன் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் நேற்று எலிமினேட் செய்யப்பட்டதால் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ரகசியங்கள் குறித்தும் இதுவரை வெளிப்படாத விடயங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் சரக்கு ஜூஸில் கலந்து கொடுப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.ஆனால் அப்படி ஒரு விஷயம் எந்த பிக்பாஸிலுமே நடப்பதில்லையாம்.


மேலும் பிக்பாஸ் அறைகளில் அதிகமான கூலிங் இருக்கும்,சாதாரணமாக இருக்கிற கூலிங்கா விட அதிகமாக இருக்கும் அதனால ஒரு சிலர் சிக்ஆவாங்க,அப்படி சிக் ஆகும்போது என்ன செய்வாங்க என்றால் அங்கு மெடிக்கல் ரூம் இருக்கும் அந்த ரூமில் டாக்டர்ஸ் இருந்தாலும் கண்டன்ஸ்ட் 21 பேரும் போக மாட்டாங்க,அதே மாதிரி ரொம்ப முடியாதவங்களை தான் வெளில டாக்டர் கிட்ட கொண்டு போய்ட்டு திரும்ப கொண்டு வந்து விடுவாங்களாம்.அதனால தான் ஏடிகே வெளிய போய்ட்டு வந்தார் என்று கூறப்படுகின்றதாம்.

அதே போல போட்டியாளர்களுக்கு பிக்பாஸில் வந்தவுடனே டெய்லி பேமெண்ட் என்றுதான் கிரெடிட் ஆகும் அவங்க அக்கவுண்டில் ,அதுக்குப்பிறகு தான் வாரத்திற்கான பேமெண்ட் என்று அக்ரிமெண்ட் போடுவாங்களாம். இது தவிர இடையில் யாராவது வெளியேறனால் அவங்க பைன் கட்ட வேண்டுமாம். இந்த சீசனில் தானாக வெளியேறிய ஜி.பி முத்துவைக் கூட 10 லட்சம் கட்ட சொன்னதாகவும் கூறப்படுகின்றது.


மேலும் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸிற்கும் வெவ்வேறு மாடலிங் துறையில் இருக்கும் டிஷைனர்ஸ் தான் ரெஸ்ஸிங் பிளான் எல்லாம் பண்ணுவாங்களாம்.இவர்களுக்கான பேமன்ட்டும் இவங்க பணத்தில இருந்து தான் கொடுக்கப்படுமாம்.

பிக்பாஸின் மிகப் பெரிய கேம் என்ன வென்றால் வீட்டில இருக்கிற யாருக்குமே டைம் தெரியாதாம்.காலையில போடுற ஷாங்கின் டைம்மையும் நைட்டு லைட் ஓப் பண்ற டைம்மையும் வச்சு தான் ஹவுஸ்மேட்ஸ் கண்டு பிடிக்கணுமாம். டைம் தெரியாமல் போட்டியாளர்கள் குழப்பத்தில் இருப்பது கண்டென்ட் கிடைக்க ஈசியாக இருக்குமாம்.


அதே போல வீட்டில அதிகமாக ரெட் கலர் பெயின்ட் யூஸ் பண்ணிக்கிறதுக்கு காரணமும் அவங்கள கோபப்படுத்துவதற்காககத் தானாம். அதே போல கன்பெஷன் ரூமை டாக் கலர்ல வைச்சிருக்கிறதுக்குக் காரணமும் இருட்டு கலர்ல இருந்தால் தான் மற்றவங்களை குறை சொல்லவும் ஈசியாக இருக்குமாம்.இதுவும் கண்டென்ட் கொடுக்கவும் ஈஸியாக இருக்குமாம்.

மேலும் கமல்சேர் கூட தான் பார்த்ததை வைச்சு ஹவுஸ்மேட்ஷுடன் பேச மாட்டாராம். தன்னுடைய டீம்ல இருக்கிறவங்களிடமும் இதை பற்றி கேட்ட பின்னர் தான் பேசுவாராம். அதே போல விஜய் டிவி யாரெ ப்ரமோட் பண்ணனும் யாரை மக்களுக்கு அதிகமாகப் பிடிக்குதோ இதை ரெண்டையும் வச்சு தான் ப்ரோமோவும் கிரியேட் பண்ணுவாங்களாம். அதே போல வீட்டுக்குள்ள 70ல இருந்து 80 கமெராக்கள் இருப்பதாகவும் பிரபல யூடியூப் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement