• May 19 2024

நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டாரா?- இது தான் காரணமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!


கடந்த வருடத்தில் இருந்து நிறைய வெற்றிகளை கண்டு வருகிறார் சூர்யா. நிஜ கதையை தழுவி வந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் சூர்யாவிற்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.

அப்படங்களின் ரிலீஸை தொடர்ந்து இந்த வருடம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது, ஆனால் அது சரியாக ஓடவில்லை. அடுத்து சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படத்தைத் தொடர்ந்தே வாடிவாசல் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்று அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.மேலும் அண்மைக்காலமாக சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் அங்கு சொந்தமாக ஒரு வீட்டை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

சூர்யா மும்பைக்கு விமானத்தில் சென்று வரும் ஏர்போர்ட் வீடியோக்களும் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன.இந்நிலையில் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தான் மும்பையில் செட்டில் ஆகவில்லை என்றும், தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் படிப்பிற்காக அங்கே இருக்கிறார்கள் அவ்வளவுதான் என கூறி இருக்கிறார்.


தற்போது வாழ்க்கையில் எதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதாகவும், அவரது நண்பர் நடிகர் மாதவன் உடன் தற்போது கோல்ப் விளையாட்டை கற்றுக்கொண்டு விளையாடி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement