• Apr 30 2024

பாகுபாடு காட்டி வியாபாரம் பண்றாங்க தமிழ் சினிமா கெட்டு விட்டது- மாமன்னன் படம் குறித்து விமர்சித்த இமான் அண்ணாச்சி

stella / 9 months ago

Advertisement

Listen News!

இதுவரை இல்லாத அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அதே அளவுக்கு படத்தின் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் விவாதங்களும் சமூக வலைதளங்கள், அரசியல் வட்டாரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் வெடித்தன.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலரும் நடிக்கத் தயங்கும் காட்சிகளை சர்வ சாதாரணமாக நடித்து அசத்தினார் உதயநிதி ஸ்டாலின். பன்றிகளை வளர்க்கும் காட்சியில் தான் அவரது இன்ட்ரோவே இடம்பெற்றது. மேலும், தனது கையிலும் பன்றி டாட்டூ போட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார்.


அருந்ததிய மக்களின் ஓட்டுக்களை கவரவே உதயநிதி இப்படி செய்கிறார் என விமர்சனங்களும் கிளம்பின. அதே சமயம் மற்ற ஹீரோக்கள் செய்யாததை உதயநிதி பெரிய மனதுடன் செய்து சாதனை படைத்துள்ளார் என பாராட்டுக்களும் குவிந்தன.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்த இமான் அண்ணாச்சி சில படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசும் போது இப்போதெல்லாம் சினிமா ரொம்பவே கெட்டு விட்டது. ஒரு சமூகத்தை வைத்து படம் பண்ணாலே ஹிட் அடித்து விடலாம் என்கிற நிலை உருவாகி விட்டது.


மேல் தட்டு, கீழ் தட்டுன்னு சும்மா தட்டு தட்டா வியாபாரம் பண்றாங்க, தமிழ் சினிமாவில் இப்படியொரு நிலைமை தொடர்வது சினிமா உலகுக்கு நல்லது அல்ல, இதையொரு காமெடியனாக சொல்லாமல் பொதுநலம் உள்ள மனிதனாக சொல்கிறேன் என இமான் அண்ணாச்சி பேசி உள்ளார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள், இயக்குநர் மாரி செல்வராஜைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இமான் அண்ணாச்சி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement