• May 13 2024

"நான் வாய் திறந்தால் சமந்தா மானம் போய்டும்"... மீண்டும் முட்டி மோதும் தயாரிப்பாளர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படமானது சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது. அந்தவகையில் இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன.


இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, "சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. அவரது நோய் எல்லாம் நாடகம். அனுதாபத்துடன் தனது படங்களுக்கு விளம்பரம் பெற முயற்சிக்கிறார். அவர் தனக்கான கதாநாயகி அந்தஸ்தை இழந்து விட்டார். சகுந்தலை கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓடவைக்க சமந்தா தனது உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்கிறார்" என்று ரொம்பவும் கடுமையாக விமர்சித்து இருந்தார். 


தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு எப்போதுமே காது மடல்களில் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும். அதை வைத்து சமந்தா தனக்கெதிரான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். அதாவது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பதுதான் காரணம் என்று வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்து உள்ளார் சமந்தா.


இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டி பாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பதில் அளித்து உள்ளார். அதில் அவர் கூறுகையில் "எனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்" என ஓப்பனாக கூறி உள்ளார். 

எனவே சிட்டிபாபுவின் இந்தக் கருத்துக்கு சமந்தா பதிலளிப்பாரா இல்லையா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement