• Apr 28 2024

''இனி அவரின் முகத்தை கூட பார்க்க மாட்டேன்..” செல்வராகவன் குறித்து சோனியா அகர்வால் ஓபன் டாக்.!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களிலும் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 2010ல் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர்.


தற்போது இதுகுறித்து பேசியுள்ள சோனியா அகர்வால், செல்வராகவன் பற்றி காட்டமாக விமர்சித்துள்ளது வைரலாகி வருகிறது.

இந்நிலையில், செல்வராகவன் குறித்து சோனியா அகர்வால் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "இயக்குநர் செல்வராகவன் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர். கணவன், மனைவியாக இருந்து பிரிந்தவர்கள் நண்பர்களாக தொடர்வது முடியாத காரியம். காதல் செத்துப்போன பின்னர் சினேகிதராக பார்க்க முடியாது. இனி என் வாழ்க்கையில் செல்வராகவன் முகத்தை பார்க்கவே மாட்டேன்" என அதிரடியாகக் கூறியுள்ளார்.


செல்வராகவன் குறித்து அவரது முதல் மனைவி இவ்வாறு கூறியது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சோனியா அகர்வால் இப்படி கூறியதற்கான காரணம், அதன் பின்னணி குறித்து எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement