• Apr 28 2024

“நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன்..” தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் நிர்வாண புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் மிரட்டியதாக நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. பெங்காலி நடிகர் சாந்து முகோபத்யாயவின் மகள். தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார் ஸ்வஸ்திகா.மேலும் அவர் பெங்காலி மற்றும் இந்தி மொழி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பெங்காலி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஸ்வஸ்திகா முகர்ஜி மிகவும் பிரபலம்.

அத்தோடு தான் நடித்திருக்கும் Shibpur படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஸ்வஸ்திகா. படம் மே மாதம் 5ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரான சந்தீப் சர்கார் மீது புகார் தெரிவித்துள்ளார்.



பேட்டி ஒன்றில் ஸ்வஸ்திகா முகர்ஜி  தெரிவித்திருப்பதாவது,

Shibpur படத்தின் ஷூட்டிங் மற்றும் டப்பிங்கின்போது என்னை சந்தீப் சர்காரிடம் அறிமுகம் செய்து வைக்கவில்லை. இன்னொரு இணை தயாரிப்பாளரான அஜந்தா சின்ஹா ராய் தான் எங்களுடன் தொடர்பில் இருந்தார். திடீர் என்று சந்தீப் சர்கார் என்னை மிரட்டி இமெயில்கள் அனுப்பத் ஆரம்பித்தார்.

நான் ஒரு அமெரிக்க குடிமகன். எனக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு உனக்கு அமெரிக்க விசா கிடைக்க முடியாதபடி செய்துவிடுவேன் என மிரட்டினார்.

அத்தோடு  போலீஸ் கமிஷனர், முதல்வர் உள்ளிட்டோர் வரை செல்வேன் என மிரட்டினார். ஒத்துழைப்பு என்றால் என்னவென்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. என் தொடர்பான காட்சிகளில் நடித்து முடித்தேன். அதற்கான டப்பிங்கும் பேசினேன். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை

முதலில் மார்ச் மாதம் தான் படம் ரிலீஸாவதாக இருந்தது. நான் ஃப்ரீயாக இருக்கும் டேட்ஸை அவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்தேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. பின்னர் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துவிட்டார்கள்.

ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டது குறித்து என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை. இயக்குநர் சொல்லித் தான் தெரிய வந்தது. உடனே நான் ஃப்ரீயாக இருக்கும் டேட்ஸை அவருக்கு இமெயில் செய்தேன். அப்பொழுது தான் விளம்பர நிகழ்ச்சிகள் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் என்ன தான் சொல்கிறார்கள்?.மார்க்கெட்டிங், விளம்பர திட்டம் குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் போஸ்டரை ரிலீஸ் செய்தபோது அதை நான் சோசியல் மீடியாவில்  ஷேர் செய்தேன்.

எனக்கு மட்டும் இல்லை என் மேனேஜருக்கும் மிரட்டில் இமெயில் வந்திருக்கிறது. சந்தீப் சர்காரின் நண்பர் என்று கூறி ரவிஷ் சர்மா என்பவர் மிரட்டில் இமெயில் அனுப்பினார். தான் ஒரு திறமையான கம்ப்யூட்டர் ஹேக்கர் என்றார்.அத்தோடு உன் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து போர்னோகிராபி இணையதளங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்றார். மேலும் மார்ஃபிங் செய்து என்னை நிர்வாணமாக மாற்றிய இரண்டு புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார் ரவிஷ் சர்மா என்றார்.

இப் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது அனைவரும் தெரியும். இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை அட்ஜஸ்ட் செய்யச் சொல்லி மிரட்டியிருப்பது சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement