• Apr 26 2024

இனி அதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்..துல்கர் எடுத்த முடிவால் ஷாக்கான பெண் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகரான இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மம்மூட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமான துல்கர் இன்று அவருக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சீதா ராமம்’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ரஷ்மிகா மந்தானா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் இதைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள துல்கர் சல்மான் பல பேட்டிகளில் பங்கேற்றுள்ளார். அப்போது தான் இனி காதல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான் இதுவரை நடித்த படங்களில் பெருமபாலான படங்கள் காதல் படங்கள் தான். இருப்பினும் ரசிகர்களால் அவர் நடித்த காதல் படங்கள் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இனி காதல் படங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவெடுத்தவுடன் தான் சீதா ராமம் படத்தின் இயக்குநர் இப்படத்தின் கதையை கூறினாராம்.

மேலும் காதல் கதைகளிலே சற்று வித்யாசமாக இருந்ததால் சீதா ராமம் படத்தில் நடிக்க துல்கர் ஒப்புக்கொண்டதாக கூறினார். மேலும் இனி கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளார் துல்கர். இதன் காரணமாக துல்கரின் காதல் படத்திற்கான ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement