• May 12 2024

நடிகர் மம்முட்டியின் படத்தில எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாங்க- சின்னத்தம்பி பட நடிகையின் வைரலாகும் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அனுஜா ரெட்டி பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.முக்கியமா சின்னத்தம்பி, சேரன் பாண்டியன் போன்ற படங்களுக்கு பிறகு இவங்க தமிழ் மக்கள் மத்தியில் நல்ல பேமஸாகியுள்ளார். தெலுங்கில் சண்டி, சூப்பர் போலீஸ் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் அனுஜா ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த பல முக்கிய நிகழ்வுகள், கிசுகிசுக்கள், வெளிவராத தகவல்கள் என பலவற்றைப் பற்றிக் கூறியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது பெண்களை சினிமாவில எப்போதுமே மட்டமாகத் தான் நினைக்கிறாங்க சில்க் ஸ்மிதா எப்படிப்பட்ட நடிகை, அவங்க வாழ்க்கையில என்ன எல்லாம் கஷ்டப்பட்டு இருப்பாங்க என்று எல்லோருக்கும் தெரியும்.


மேலும் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சை இல்லை, அவங்க வாழ்க்கையில அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க. தன் கிட்ட யாரும் நெருங்க கூடாது என்று தான் அவங்க தன்னை சுத்தி ஒரு வேலி அமைச்சுக்கிட்டாங்க. உண்மையாலுமே அவங்க ரொம்ப ரொம்ப சாப்ட்  கேரக்டர். அவங்கள மாதிரி ஒரு நல்லவங்கள நீங்க பார்க்கவே முடியாது அப்படின்னு அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்.

அத்தோடு சமீபத்தில் பாத்தீங்கன்னா ஹிந்தி தெலுங்கு நடிகைகள் நிறைய பேரு தமிழ் சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைக்குது. ஆனால் அதே அளவுக்கு நம்ம ஊரு நடிகர்களுக்கு அங்கே வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது. இது ஏன் பார்த்தீங்கன்னா அங்க இருந்து வருவாங்க என்ன மாதிரி டிரஸ் கொடுத்தாலும் என்ன மாதிரி கேரக்டர் கொடுத்தாலும் எதுவும் சொல்லாமல் நடிச்சிட்டு போறாங்க ஆனா நம்ம ஊர்ல இருக்க பொண்ணுங்க அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க, இதுதான் முக்கிய காரணமா இருக்கு.  அந்த காலத்துல ஐட்டம் டான்ஸ் க்கு சினிமாவுல ரொம்ப முக்கியம் இருந்துச்சு, அத வச்சு படத்துக்கு வியாபாரம் பண்ணுவாங்க.


அதனால அந்த மாதிரி நடிக்கிற நடிகைகளுக்கு ரொம்ப மவுஸ் இருந்துச்சு.  ஆனா இப்போ அது சுத்தமா மாறிடுச்சு. ஏன் என்று பார்த்தா ஹீரோயினை வச்சேஇப்ப எல்லாமே பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.  நான் நடிச்சிட்டு இருந்தப்போ எனக்கும் பல பாலியல் தொந்தரவுகள் வந்து இருக்கு.  முக்கியமா மம்முட்டி சார் படத்திலிருந்து எனக்கு ஒருத்தர் இந்த மாதிரி டார்ச்சர் கொடுத்தாரு. அதனால நான் அந்த படத்தில் இருந்து ரெண்டே நாள்ல கிளம்பி வந்துட்டேன். அதுக்கப்புறம் அந்த படம் யூனிட்ல இருந்து என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாங்க, ஆனாலும் நான் அந்த படத்துல நடிக்க முடியாது என்று சொல்லிட்டேன் .அதுக்கப்புறம் மலையாள படங்களை நடிக்கிறது குறைச்சிக்கிட்டேன்.  


 ரேப் பண்றவங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு, இந்த மாதிரி பண்றவங்கள நாடுரோட்டில நிக்க வெச்சு அந்த இடத்துல கட் பண்ணி அதுக்கப்புறம் அவங்களை கொலை பண்ணனும் அப்படின்னு ரொம்ப ஆத்திரமாவே பதில் அளித்து இருக்கிறார்கள். மேலும் உங்கள பத்தி வந்த கிசுகிசுக்களை பத்தி கேட்டதுக்கு நிறைய பேரோட கிசுகிசு பேசி இருக்காங்க, ஏன் கவுண்டமணி சார் கூடயே பேசி இருக்காங்க. எனக்கு கவுண்டமணி சார் ரொம்ப பிடிக்கும் நான் அவர் கூட நடிச்சிருக்கேன். வடிவேல் சாரும் ரொம்ப பிடிக்கும், வடிவேலு ஒரு அற்புதமான நடிகர் என்றும் இன்னும் பல சுவாரஸியமான விடயங்களைக் கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement