• Apr 27 2024

நயன்தாராவை முதன் முதலில் இங்கு தான் சந்தித்தேன்- பிரஸ் மீட்டில் வெளிப்படையாகக் கூறிய விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நானும் ரௌடி தான் என்னும் திரைப்படத்தின் மூலம் நண்பர்களாகி பின்பு காதலித்து வந்த முக்கிய ஜோடி தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. 7 வருடங்களாகக் காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் எனப் பலரும் வந்திருந்தனர். திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

திருமணத்தின் பின் நேற்றைய தினம் திருப்பதி கோவிலுக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இதனை அடுத்து சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன், அவருடைய மனைவியும் நடிகையுமான நயன்தாரா, மஞ்சள் புடவையில் மங்களகரமாக வந்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல தாஜ் க்ளப்ஹவுஸ் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தம்பதி சகிதமாக ஜோடியாக சந்தித்தனர். இதில் பத்திரிகையாளர்களுடன் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “அனைவரும் வந்திருக்குறதுல ரொம்ப சந்தோஷம்… அனைவருக்கும் நன்றி.. எல்லாரும் சாப்டீங்களா? .. நன்றி.. ப்ரஸ் மீட் நிகழ்ற இந்த ஹோட்டல்ல தான் இவங்கள முதல் முதலில் சந்திச்சு கதை சொன்னேன். அதுக்காக தான் இங்கயே இந்த சந்திப்பை நிகழ்த்தனும்னு நெனைச்சோம்.. .. திருமணத்துக்கு உங்கள் அன்பும், ஆதரவும் கொடுத்தீங்க. நன்றி, இதுக்கு அப்றம் வாழ்க்கைக்கும் சரி, புரொஃபஷனல் கரியருக்கும் சரி உங்க சப்போர்ட் தேவை. நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement