• May 08 2024

பசினா சும்மா பசி இல்லை காடுப்பசியாக இருக்கு- படவாய்ப்புக்காக காத்திருக்கும் சிம்பு- அப்படியொரு ஆசையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருப்பவர் தான் சிம்பு.இவர் மீண்டும் கம்பேக் கொடுத்து நடித்து வருகின்றார்.மாநாடு படம் மாபெரும் வெற்றியை கொடுத்து சிம்புவின் மார்கெட்டையே வானுலக பார்க்க வைத்தது. 

அதனை அடுத்து வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ஓரளவு வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக அவரின் நடிப்பில் பத்து தல படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது.அந்தப் படத்தில் கே.ஜி.எஃப் யாஷுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்த கதாபாத்திரத்தில் பெரிய டானாக காட்சியளிக்கிறார் சிம்பு. இந்த நிலையில் ஒரு ஆங்கில சேனலில் பேட்டி கொடுத்த சிம்பு அவரின் சினிமா பற்றிய ஆசையை வெளிப்படையாக கூறியிருந்தார்.


அதாவது சிம்புவுக்கு சமீபகாலமாக சினிமா மீது பெரிய பசியே வந்துவிட்டதாம்.அந்த பசிக்கு ஏற்ப ஸ்கிரிப்டுகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். பசினா சும்மா இல்ல, காட்டுப்பசியாம். அந்த மாதிரி இருக்கும் போது கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்து விட முடியாது என்றும் என்னை நிரூபித்துக் கொள்ள காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதனால் சிம்பு இனிமேல் தேர்வு செய்யும் படங்கள் வேற லெவலில் இருக்கும் போல இருக்கே என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement