• May 19 2024

சீரியல் நடிகை ஸ்ரீநிதியின் தந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகி வரும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நடிகைகளும், சினிமா நடிகைகளுக்கு இணையாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அதனால், சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது சமூகவலைத்தளங்களில் இணையத்தில் வைரலாக மாறிவிடும். இதனால், தன்னை பிரபலம் படுத்தும் போது, ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர். அப்படி சமீப காலமாக பல்வேறு சர்சைகளில் சிக்கியவர் தான் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

நடிகை ஸ்ரீநிதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அதனை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும் வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில் அண்மையில் நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதனை தொடர்ந்து அவரது அம்மா, ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் இவர் அண்மையில் மன அழுத்தம் காரணமாக ஸ்ரீநிதி சிகிச்சை எடுத்து வருகிறார். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக அழுது கொண்டே வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் தனது சகோதரியுடனும் தனுது தந்தையுடனும் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை இட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Advertisement