• Apr 26 2024

நடிகை கோவை சரளாவின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- அச்சு அசல் அவரைப் போலவே இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

1983 ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் கோவை சரளா.இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகின்றார். இதுவரை 800 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல தான் உற்சாகம் குறையாமல் நடித்து வருகிறார்.

 மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். தற்போது இவர் அஸ்வின் நடிப்பில் உருவாகியிருக்கும் செம்பி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.இப்படி சினிமாவில் கோவை சரளா கொடி கட்டி பறந்தாலும் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற வில்லை என்று தான் சொல்லணும். இவருக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். கோவை சரளா தான் கடை குட்டி.


தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி,சகோதரன் பிள்ளைகளையே அவர் படிக்க வைத்து வருகிறார். மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி மேலும், தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக கோவை சரளா அர்ப்பணித்து விட்டார் என்று சொல்லலாம். 

இந்நிலையில் நடிகை கோவை சரளாவின் சொந்த ஊர், வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. நடிகை கோவை சரளா அவர்கள் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது அவர் பிறந்த ஊர் இல்லை.


வேலைக்காக கோவை சரளாவின் மொத்த குடும்பமும் கோவைக்கு வந்து விட்டார்கள். ஒரு வாடகை வீட்டில் கோவை சரளாவின் மொத்த குடும்பமும் வாழ்ந்திருந்தது. 15 வயது வரை குடும்பமும் சரளா அந்த வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். கோவை சரளாவின் படிப்பு விவரம் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர் மேடை நாடகங்களில் சிறு வயதிலிருந்தே நடித்திருந்தார் என்று அக்கம் பக்கத்தினர் கூறி இருக்கிறார்கள். சரளாவின் 15 வயதிற்கு பிறகு அந்த வீட்டை விட்டு கோவை சரளாவும் அவருடைய குடும்பமும் வெளியேறி விட்டார்கள்.

தற்போது கோவை மாவட்டத்திலேயே கோவை சரளாவின் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. அங்கு அவருடைய அம்மாவிற்காக ஒரு வீடும், சென்னையில் ஷூட்டிங் போக பிற நேரங்களில் சென்னையில் சரளா வந்து வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. சரளாவின் அம்மாவிற்கு 94 வயது ஆகிறது. தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நல்ல தெளிவாக பேசியும் நடமாடிக் கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement