• May 18 2024

கடும் கோபத்துடன் வீட்டுக்கு வந்த குணசேகரன்- ஈஸ்வரி அப்பாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி- Ethirneechal - Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் குணசேகரனுக்காக எல்லோரும் வீட்டில் காத்திருக்கின்றனர். அப்போது ஒருவர் வருபவன் குணசேகரன் இல்லம்மா ஒத்தை பனை சுடலை உக்கிரமாக வந்திருக்கிறான் என்ற சொல்கின்றார். இதைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் குணசேகரன் வந்ததும் விசாலாட்சி ஆராத்தி எடுக்கச் சொல்கின்றார். அப்போது அவர்களும் எடுத்து குணசேகரனை உள்ளே கூட்டிட்டு போகின்றனர். மேலும் ஈஸ்வரியின் அப்பா நாங்க வீட்டுக்கு கிளம்புறோம் என்று சொல்கின்றார். அதற்கு குணசேகரன் பொண்ணை கொடுத்து இந்த வீட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறீங்க இருந்து சாப்பிட்டு போங்க என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement