• Apr 26 2024

''ஒழுங்கா பணத்தை திருப்பி கொடுத்துடுங்க'' - போண்டாமணி திருமணத்தில் விஜயகாந்த் செய்த செயல்.. உண்மையை கூறிய முக்கிய பிரபலம்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்த், கமல் ஹாசன் அலை தமிழ் சினிமாவில் பலமாக அடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த்.  இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார்.

தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் செம ஹிட்டடித்தது.

தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின்  அவர்களுக்கு இணையாக விஜயகாந்த் வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். 

விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம்  வாங்கிய கடனை அடைத்து வருவாயையும் அதிகரித்தார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பலருக்கு பல சமயங்களில் உதவியிருக்கிறார்.தற்போது போண்டா மணிக்கு அவர் செய்திருக்கும் உதவி குறித்து தெரியவந்திருக்கிறது.

வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கிய போண்டா மணி திருமணத்தை நடிகர் சங்கத்தின் திருமண மண்டபத்தில் வைக்கலாம் என எண்ணி மண்டப நிர்வாகியை அணுகினர். ஆனால், வேறு திருமணத்திற்காக அட்வான்ஸ் வாங்கிவிட்டதாக அவருக்கு பதில் கிடைத்திருக்கிறது. இதனால் என்ன செய்வதென்று யோசித்தவாறு இருந்தார் போண்டா மணி.

விஜயகாந்த் எடுத்த நடவடிக்கை: இந்தத் தகவலானது அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த்திற்குய் தெரியவந்தது. உடனடியாக மண்டப நிர்வாகியை தொடர்புகொண்ட விஜயகாந்த், நடிகர் சங்க திருமண மண்டபம் என்பது நடிகர்களுக்கானது. எனவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. எனவே யாரிடம் அட்வான்ஸ் வாங்கினீர்களோ அவர்களிடம் அதை திருப்பி கொடுத்துவிட்டு போண்டா மணி திருமணத்தை நடத்துங்கள்" என கூறியிருக்கிறார். இந்தத் தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement