• May 19 2024

"இவரை இறங்கி ஏதாச்சு செய்யணும்"... வெளுத்து வாங்கிய கவுதம் மேனன்... கடுப்பான ப்ளூ சட்டை மாறன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகிய நாளிலிருந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அத்தோடு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி உள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் பிரமாண்ட நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு இருக்கிறது.


இவ்வாறாக இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், ப்ளூ சட்டை மாறன் போன்ற ஒரு சில விமர்சகர்கள் இப்படத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் "வீணா போனவன் டான்" ஆன கதைனு சொல்லி விமர்சித்து இருந்தார்.


அதுமட்டுமல்லாது கவுதம் மேனன் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் "படம் பார்க்க வருபவர்கள் நன்றாகத் தூங்கிவிட்டு வாருங்கள்" எனக் கூறி இருந்தார். இதற்கு ப்ளூ சட்டை மாறன் "அவர் அப்படி சொல்லும் போதே கருகுற வாடை அடித்ததது" எனக் கிண்டலடித்து இருந்தார்.

அத்தோடு பிரபல இயக்குநரான கவுதம் மேனனை "வாய்ஸ் ஓவர் பைத்தியம்" என்றும் தரக்குறைவாக பேசி இருந்தார். இவரின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் பிரமாண்டமாக இடம்பெற்றது. இதில் முக்கிய பிரபலங்களான சிம்பு, இயக்குநர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உட்படப் பலரும் கலந்துகொண்டு ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தனர். 


அதாவது இயக்குநர் கவுதம் மேனன் பேசுகையில் "இன்னொருத்தர் பொழப்புல மண்ணு போடுறது தான் விமர்சனங்களா என நான் பலமுறை யோசித்தது உண்டு, ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசவே கூடாது என்று நினைக்கிறன். இருந்தாலும், நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன்.

எனக்கெல்லாம் பயங்கரமான கடுப்பு. எதற்கு இப்படி ஒரு விமர்சனம் செய்யவேண்டும். ப்ளூ சட்டை மாறனுக்கு காசு வரவேண்டும். அதற்காக அவருக்கு ஸ்பான்ஸர் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாமா பண்ணுவாரு" என வெறுப்புடன் கூறியிருந்தார்.


மேலும் "நீங்க விமர்சனம் பண்ணுங்க, ஆனால் அதற்கு ஒரு எல்லை உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தினைப் பற்றிக்கூட ரொம்ப மோசமாக பேசியிருந்தார். படம் ஹிட் ஆனாலும் விமர்சனத்தின் வாயிலாக தவறாக பேசிவிட்டு, எங்கேயோ ஒரு இடத்தில் படம் நல்ல இருக்குனு சொல்லிட்டு போய்டுவாரு. இதனால், எனக்கு இவரை இறங்கி ஏதாச்சும் செய்யலாமானு கோபம் வருது. மத்த இயக்குநர்களுக்கு வருதானு எனக்கு தெரியாது, ஆனா எனக்கு கோபம் வருது" எனவும் ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இதனால் கடுப்பான விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தேவையில்லாமல் சில பதிவுகளின் வாயிலாக இயக்குநர் கவுதம் மேனனை தாக்கி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது " சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே ஒரு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தான்" என்று கிண்டலாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாது கவுதம் மேனன் மேல் உள்ள கடுப்பில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு கொண்டே இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Popular articles

Advertisement

Advertisement

Advertisement