• May 19 2024

சூர்யா பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த ரசிகர்கள்- நடந்தது என்ன தெரியுமா?- தீவிர விசாரணை நடத்தும் போலீஸார்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா.இவர் இன்றைய தினம் 48 வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார்.அதேபோல், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது.

அத்தோடு இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரும் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. மேலும்  நடிப்புத் தவிர அகரம் பவுண்டேஷன் மூலம் மாணவர்களின் கல்விக்கும் உதவி செய்து வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.


பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், படிக்க ஆர்வம் உள்ளவர்கள் என தகுதியான நபர்களை தேர்வு செய்து உதவுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவி செய்திருந்தார். இப்படி மாணவர்களுக்கு தேடித் தேடி கல்வி கொடுத்து வரும் சூர்யா, அவரது ரசிகர்களுக்கும் உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

 இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளில் ஆந்திராவின் பால்நாடு பகுதியில் Narasaraopet என்ற இடத்தில் சூர்யா ரசிகர்கள் அவர் பிறந்தநாளை கொண்டாட பெரிய கட்டவுட் வைத்திருக்கின்றனர்.அப்போது அந்த கட்டவுட்டின் இரும்பு ஃபிரேம் மேலே இருக்கும் மின்சார கம்பியில் உரசி இருக்கிறது.


மின்சாரம் தாக்கியதில் இரண்டு சூர்யா ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கின்றனர். அவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement