• May 18 2024

அடுத்தடுத்து ரிலீஸிற்குக் காத்திருக்கும் யாஷிகாவின் திரைப்படங்கள்-செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருப்பினும் 2018 இல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னரே மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாசிகா தொடர்ந்து உத்தமன் ஆர்வமுடன் ராஜபீமா ஸ்ரீ சூர்யாவுடன் கடமையை செய் பாம்பாட்டம் போன்ற ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்

தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்த நடிகை யாஷிகா கடந்த ஆண்டில் ஒரு கோர விபத்தில் சிக்கி அவருடைய தோழி பவானி இறந்தமையால் சிறிது மன உளைச்சலுக்கு ஆளானார்.

தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறி உள்ள யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றார். இதையடுத்து தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்த யாஷிகா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இவற்றில் சில படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. இதில் எஸ். ஜே சூர்யாவுடன் நடித்துள்ள கடமையை செய் படம் ஜூன் 24 அன்றும் ரங்கா இயக்கத்தில் நடித்துள்ள பெஸ்டி என்ற திரைப்படம் ஜூலை 1இல் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement