• May 19 2024

கழுத்து நிறைய வெள்ளை மாலை அணிந்து... PS-1 படம் பார்க்க சென்ற வனிதா... கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வனிதா. இவர் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயக்குமாரின் மகளாவர். வெள்ளித்திரையில் படு பிஸியாக இருந்து வரும் வனிதா, கடந்த சில வருடங்களாக சர்ச்சைகள், குடும்ப பிரச்சனைகள் என வெள்ளிதிரையில் முகம் காட்டாமல் இருந்தார். 


அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் 3' சீசன் மூலம் சின்னத்திரையில் நுழைந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் காரசாரமான போட்டியாளராக இருந்த இவர் பிக்பாஸூக்குப் பின் ‘குக்வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமையலில் கை தேர்ந்தவரான வனிதா போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றியும் பெற்றார்.


அதன் பின்னர் 'கலக்கப் போவது யாரு' என்ற ஷோவில் நடுவராக கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியிலும் பங்கு பற்றியிருந்தார். அதாவது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஆடிய அவர், நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி அதிரடி காட்டினார். 


இவ்வாறாக பல தடைகளைத் தாண்டி வருகின்ற வனிதா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும், பிசினஸ் தொடர்பான பதிவுகளையும் இட்டு வருவார். 

அந்தவகையில் இவர் நேற்றைய தினம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தினைப் பார்ப்பதற்கு சென்றிருக்கின்றார். இதில் அவர் அணிந்து சென்ற நகை தொடர்பாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதாவது கழுத்து நிறைய வெள்ளை முத்துக்களால் ஆன மாலை அணிந்து வெள்ளை உடையில் சென்றிருக்கின்றார்.


அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு இருக்கின்றார். அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் "ரொம்பவே அழகாக இறுக்கின்றீர்கள்" எனக் கூறி வருவதோடு வேறு சில ரசிகர்கள் "ஏன் இத்தனை மாலை" எனக் கேட்டு அவரை கலாய்த்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement