• May 04 2024

போதையில் சுய நினைவின்றி தள்ளாடிய பிரபல நடிகர்கள்.. அதிரடி முடிவெடுத்த திரையுலகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல தரமான படங்களை தந்து கொண்டிருக்கும் மலையாள சினிமாவுக்கென உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால் தற்போது அங்கு இரு நடிகர்களுக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற விடயமானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அதாவது திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இனி இருவரின் படங்களுக்கும் ஒத்துழைக்க முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் இதுதொடர்பாக தயாரிப்பாளர் ரஞ்சித் பத்திரிகையாளரை சந்தித்த போது கூறுகையில் "போதைக்கு அடிமையான கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது என்றும், ஷேன் நிகாம் மற்றும் ஸ்ரீநாத் பாசி இருவரும் அடிக்கடி சுயநினைவின்றி நடந்து கொள்வதாகவும்" அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இருவரும் ஷூட்டிங்கில் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அவர்களுடன் இருக்கும் சக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது" எனவும் தெரிவித்திருந்தார். 


இவ்வாறான திரையுலக தடையால் ஷேன் நிகம் ஒப்பந்தமாகியுள்ள 'பெர்முடா, குபானி, கல்ப், பைங்கிலி, பராக்கிரமம்' மற்றும் ஆயிரத்தோன்னம் ரவு ஆகிய படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.  அதேசமயம் ஸ்ரீநாத் பாசி வேண்டுமென்றே பல படங்களுக்கு ஒரே தேதிகளைக் கொடுத்ததாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் மற்றுமோர் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் போதைக்கு அடிமையான நடிகர்களின் பட்டியலை  மாநில அரசிடம் சமர்ப்பிக்கப் போவதாகவும் அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement