சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபல சீரியல் நடிகை ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அதாவது தெலுங்கு சினிமாவில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி.இவர், பிரீசர் எனப்படும் ரம் வகையை சேர்ந்த மதுபானம் 8 பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்த போலீஸார் மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை கண்டறிந்து அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 2021ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி பஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார். இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது.
இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள மோத்தி காவல் நிலையத்திலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கட்டா மைதிலி புகார் அளித்து உள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ள
நிலையில், நடிகை மைதிலி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!