• May 08 2024

விமர்சகருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிரபல நடிகை : விஜய் ரசிகர்களிடம் இருந்து குவியும் பாராட்டு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விமர்சகர் உமைர் சந்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் லெஜண்ட் பட ஹீரோயினான ஊர்வசி ரவ்தெலா. அதை பார்த்த தமிழ் ரசிகர்களோ அஜித், விஜய், சூர்யா செய்ய வேண்டியதை ஊர்வசி செய்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.

 நாகர்ஜுனாவின் இளைய மகன் அகில் அகினேனி நடித்திருக்கும் ஏஜெண்ட் படம் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா.

இவ்வாறுஇருக்கையில் தன்னை விமர்சகர் என்று கூறும்  உமைர் சந்து என்பவர் ஊர்வசி பற்றி ட்வீட் செய்தார்.

ஐரோப்பாவில் ஏஜெண்ட் பட ஷூட்டிங் நடந்தபோது ஊர்வசிக்கு தொல்லை கொடுத்தார் அகில் அகினேனி.மேலும் அவருக்கு மெச்சூரிட்டி இல்லை என ஊர்வசி நினைக்கிறார். அவருடன் சேர்ந்து வேலை செய்ய அவருக்கு அசவுகரியமாக இருக்கிறது என உமைர் சந்து ட்வீட் செய்தார்.

அந்த ட்வீட்டை பிரிண்ட்ஸ்கிரீன் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது பொய் என கூறியுள்ளார் ஊர்வசி. அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது...

அவதூறு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறது என் சட்ட குழு. நீங்கள் ஒன்றும் என் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் இல்லை.அத்தோடு  நீங்கள் மெச்சூரிட்டி இல்லாத பத்திரிகையாளர். என்னையும், என் குடும்பத்தையும் மிகவும் அசவுகரியமாக உணர வைக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.

லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஊர்வசி ரவ்தெலா. இவ்வாறுஇருக்கையில்  அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் ஊர்வசிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உமைர் சந்து அஜித் குமார், தளபதி விஜய், சூர்யாவின் கேரக்டர் பற்றி மோசமாக ட்வீட் போட்டார். அத்தோடு அதை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்துவிட்டார்கள். அஜித் மற்றும் விஜய்க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ட்வீட் செய்தார்.

கங்குவா பட ஹீரோயின் திஷா பதானியுடன் சூர்யாவை சேர்த்து வைத்து ட்வீட் செய்தார். அதை எல்லாம் பார்த்தவர்களோ, அஜித், விஜய், சூர்யா ஆகியோர் தங்களின் மனைவிமார்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மேலும் இந்த டுபாக்கூர் ஆசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

அத்தோடு அஜித் அல்லது விஜய் அல்லது சூர்யா செய்வார் என்று எதிர்பார்த்த விஷயத்தை ஊர்வசி ரவ்தெலா செய்திருக்கிறார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஊர்வசியை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா ஆகியோரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த நபர் பிரபலங்களை பற்றி அசிங்கமாக ட்வீட் செய்வதை நிறுத்துவார் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஊர்வசியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, நீங்கள் சரியான காரியத்தை செய்திருக்கிறீர்கள் மேடம்.அத்தோடு உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். உமைர் சந்துவை சும்மாவிடக் கூடாது என தெரிவித்துள்ளனர்.



சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ஊர்வசி.மேலும் முதல் படத்தில் கமிட்டான வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement