• Apr 28 2024

பிரின்ஸ், சர்தார் வெளியான போதும்... குறையாத மவுசுடன் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சாதனை ஆக உருவாகி உள்ள ஒரு படமே 'பொன்னியின் செல்வன்'. அதுமட்டுமல்லாது மணிரத்னம் அவர்களின் பல நாள் கனவும் இப்படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.

இந்த படத்திற்காக பல வருடங்களாக பலரும் முயற்சி செய்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யாராலும் முடியாத ஒன்றை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்து சாதனை படைத்துவிட்டார் மணிரத்னம்.


அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அவர்களின் காலத்தில் இருந்தே இந்த நாவலை படமாக எடுக்க முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் மணிரத்னத்தினால் மட்டுமே அது சாத்தியம் ஆகியுள்ளது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

முதல் பாகம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆக மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.


இந்தப் படமானது வெளியான நாள் முதல் வசூலை வாரிக் குவித்த வண்ணம் தான் இருக்கின்றது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 31ஆம் தேதி வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் இதுவரை மட்டுமே சுமார் ரூ. 465 கோடியை கடந்து வசூல் சாதனை செய்து வருகிறது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' ஆகிய இரு திரைப்படங்களும் இன்று வெளிவந்துள்ளன. இவ்வாறாக இரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளிவந்த நிலையிலும், தற்போது தமிழகத்தில் 250 திரையரங்கத்தில் பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.


மேலும் நான்கு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "மற்ற படங்கள் வெளிவந்தாலும் பொன்னியின் செல்வன் மவுசு மட்டும் குறையவே குறையாது" எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement