• May 19 2024

அமிர்தாவோடு ரொமான்ஸ் பண்ணும் எழில்- இடையில் வந்து குழப்பிய ஜெனி- பாக்கியாவால் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன ஒளிபரப்பப்படவுள்ளது என்று பார்ப்போம்.

கிளாசிற்குச் சென்ற பாக்கியா தனது நண்பர்களுடன் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார். அப்போது பழனி பாக்கியாவிடம் நீங்க அம்மாவுக்கு தேங்காய் சாதம் செய்து தருகிறேன் என்று சொன்னீங்க அது எப்படி செய்வது என்று சொன்னால் நானே செய்து பழகிடுவேன் என்று சொல்ல பாக்கியா கவலைப்படாதீங்க நாளே செய்து தருகிறேன் என்று சொல்கின்றார்.


தொடர்ந்து அமிர்தா கிச்சனில் தனியாக சமைத்துக் கொண்டிருக்க எழில் மறைந்திருந்து பேப்பர் சுருட்டி அமிர்தா மீது எறிகின்றார். முதலில் நிலா என்று நினைத்த அமிர்தா பின்னர் எழில் தான் இப்படி செய்வது என்று கண்டு பிடிக்கின்றார். பின்னர் இருவரும் ரொமான்ஸ் செய்ய அந்த நேரம் ஜெனி வந்து விடுகின்றார்.

ஜெனிதான் எதுவும் பார்க்கவில்லை என அங்கிருந்து கிளம்ப அமிர்தா எழிலை போகச் சொல்லிஅனுப்பி விடுகின்றார்.மறுபுறம் பாக்கியா பழனிச் சாமி அம்மாவுக்கு தேங்காய் சாதம் கொண்டு போய் கொடுக்கும் போது அவர் பழனிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதை பற்றி பேச பாக்கியா கண்டிப்பா அவருக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என கூறி விட்டுச் செல்கின்றார்.


தொடர்ந்து டைனிங் டேபிளில் இருக்கும் ராமமூர்த்தி பெரிதாக போன் பேச ஈஸ்வரி எதுக்கு பெருசா கதைக்கிறீங்க என்று கேட்கிறார். அப்போது அவர் தன்னுடைய நண்பன் சென்னைக்கு வந்திருக்கிறான் என்ற விஷயத்தை சொல்ல பாக்கியா அப்போ அவரோட பொண்ணுக்கு பழனிச்சாமி சேரை கேட்டுப் பாருங்க மாமா என்று சொல்ல அவரும் கேட்க நண்பரும் ஓகே சொல்லி விடுகின்றார்.

இதனால் பாக்கியா உடனே பழனிச்சாமிக்கு பேன் செய்து எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வாங்க என்று சொல்ல முதலில் பழனிச்சாமி மறுக்க பாக்கியா அவரது அம்மாவிடம் பேசுகின்றார்.அவருடைய அம்மாவும் பழனியைக் கூட்டிட்டு வாறோம் என்று சொல்கின்றார். தொடர்ந்து பழனியும் பாக்கியாவும் பேசிட்டு இருக்கின்றனர்.


அப்போது பாக்கியா பழனிச்சாமியிடம் நீங்க நல்லா சம்பாதிக்கிறீங்க நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது. உங்களுககும் துணை வேணும் தானே பொண்ணு பார்க்க வாறீங்க என்று சொல்ல இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோபி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement