• May 19 2024

டக்குனு வார்த்தை விடுறீங்க அசீம்...அமுதவாணனிடம் பொங்கி எழுந்த தனம்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்-6.  கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதியல் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் 11போட்டியார்கள் மட்டுமே உள்ளார்கள்.

இதில் இந்த வாரம் யார் வெளியேறப்போறார்கள் என ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவ்வாறுஇருக்கையில் நரகம் சொர்க்கம் என இரண்டு டீமாக பிரிக்கப்பட்டு புதிய டாஸ்க ஒன்று கொடுக்கப்படுகின்றது.அதில் நரகத்தில் அதிக நேரம் பெடலிங் செய்தவர் சொர்க்கத்திற்கும் சொர்க்கவாசிகள் கலந்து பேசி அவர்களில் ஒருவரை நரகத்திற்கும் அனுப்ப வேண்டும்.இவ்வாறு புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் எந்த விசயத்தை மாற்றிக் கொண்டால் தங்களைப்போல சொர்க்கத்தை வந்து அடையலாம் என அறிவுரை கூறச் சொல்லும் போது ரச்சிதா அசீமிற்கு அறிவுரை கூறுறாங்க..அதாவது நீங்க டக்குனு வார்த்தை விட்டால் கேட்கிறவங்களுக்கு மனம் நோகுது எண்டும்..கதிரவன் ஷிவினுக்கும் அட்வைஸ் பண்ணிறாங்க.

இவ்வாறுஇருக்கையில் அமுதவாணன் தனத்திற்கு அடவைஸ் கூறுகின்றார்.அதாவது கோபத்தை குறைக்க வேண்டும் எனக் கூற கோபத்தில் தனம் ..நான் தேவையான அளவு கோபத்தை குறைத்துக் கொண்டு தான் வந்து இருக்கிறேன்..இதை விட குறைத்தால் நான் அமுதவாணன் மாதிரி தான் இருக்கனும் என கத்தி விடுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement