• May 18 2024

பிரபல இயக்குநர் கௌதம் மேனன் அடுத்து இயக்கவுள்ள படம் யாரை வைத்து தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

காதலை கவிதை வடிவில் காவியமாக படைக்கக் கூடிய திறன் கொண்ட ஒரு திறமையான இயக்குநர் கௌதம் மேனன். இதற்கென்றே தனி ரசிகர் கூட்டமே இவருக்கு உண்டு. இவர் இயக்கிய காதல் படங்களுக்கு உதாரணமாக மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் என இன்னும் இன்னும் எத்தனையோ படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய ஒவ்வொரு படத்திலும் காதல் ரசம் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை போன்று மறக்க முடியாமல் இருக்கும். அந்த அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் காதல் நிறைந்திருக்கும்.

இவர் இயக்குநராக மட்டுமன்றி நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்து வருகிறார் பல படங்களில் நடித்து வந்த கௌதம் மேனன் 'ருத்ரதாண்டவம்' என்ற படத்திலே வில்லன் என்ற கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இதனையடுத்து தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாது இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை என்ற படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து கௌதம் மேனனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் கௌதம் மேனன் தற்போது சிம்புவின் நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தினை இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இப்படமானது செப்டம்பர் 15-ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது அவரிடம் ஏனைய இயக்குநர்களிடம் கேட்கப்படும் கேள்வி போன்று "அஜித்தோ அல்லது விஜய்யோ அடுத்தது" எனக் கேட்கப்பட்டது. அதற்கு உடனே பதிலளித்த கௌதம் மேனன் சற்றும் யோசிக்காமல் விஜய் என கூறினர். இவர் விஜய் என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது ஏனெனில் கௌதம் மேனன் அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் விஜய்யை வைத்து அவர் இதுவரை எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.

எனவே அவர் அக்கேள்விக்கு "அஜித் தான்" என்று கூறுவார் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கௌதம் மேனன் விஜய் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதே நேரம் விஜய் ரசிகர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை அளித்திருந்தது அதுமட்டுமில்லாமல் இத்தகவலை விஜய் ரசிகர்கள் அதிகளவில் தமது சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement