• May 01 2024

ரஜினி, கமல் கூட வாங்காத 1 கோடி சம்பளத்தை முதல் முதலாக வாங்கியவர் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் என்னைப் பெத்த ராசா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ராஜ் கிரண். இவர் இதனைத் தொடர்ந்து என்ராசாவின் மனசிலே அரண்மனைக் கிளி மாணிக்கம் தலைமுறை எனப் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இறுதியாக கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் நடித்திருந்தார்.


இநந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமா வரலாற்றில் இவர் தான் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கே.வி. பாண்டியன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த மாணிக்கம் எனும் படத்தில் நடிக்க தான், நடிகர் ராஜ்கிரனுக்கு ரூ. 1 கோடி சம்பளமாக வழங்கபட்டுள்ளது.அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல் கூட வாங்காத சம்பளத்தை ராஜ்கிரண் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement