• Apr 28 2024

படவாய்ப்பில்லாததால் ஐஸ்கிறீம் விற்கும் ப்ரண்ட்ஸ் பட நடிகர்- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது வரை நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் சில காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிய பிரபலங்களும் இருக்கின்றனர்.

அப்படி ஒரு நடிகர் தான் பரத் ஜெயந்த், இவர் விஜய்யின் ப்ரண்ட்ஸ், விஜய்காந்தின் வானத்தை போல, சகலகலா பூம் பூம் தொடர் என குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.


அதன்பிறகு பள்ளி படிப்பு, கல்லூரி என படிப்பில் கவனம் செலுத்திய இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் பணிபுரிந்தார்.இப்படத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கும் என பார்த்தால் அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை.எனவே இப்போது பரத் ஜெயந்த் ஒரு புதிய தொழிலில் இறங்கியுள்ளார். 

கார்ட்டூன் படங்களில் ஐஸ்கிரீம் ட்ரக் இருப்பதை நான் பார்த்திருப்பேன். இதுபோன்று சென்னையில் இல்லையே என்று நினைக்கும் போது தான் நாம் ஏன் இதை செய்யக்கூடாது என்று யோசித்தேன்.புதிதாக ஐஸ்கிரீம் டிரக்கை தொடங்கி உள்ளேன், என்னிடம் எல்லா விதமான ஐஸ்கிரீம் வகைகளும் உள்ளன என பேட்டியில் கூறியுள்ளார்.


மேலும் பொதுவாக திரைப்பிரபலங்கள் தனியாக சுய தொழில் மேற்கொண்டு வருவது என்பது சாதாரணமாகி விட்டது. எனவே இவருக்கும் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement